Tuesday, June 6, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (3)


தமக்கு தாமே குழி பறித்துக் கொள்ளும் சமூக செயல்நுட்ப போக்கில்;
ரஜினியை முதல்வராக்க போட்டி போடும், சசிகலாவும் ஸ்டாலினும்


‘The Role of Different Media in Shaping Public Opinion’ (‘பொதுமக்கள் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு’) என்ற தலைப்பில், 1980களில் திருச்சி   St.Joseph College- இல், 'இதழியல் மற்றும் பொது தகவல் பரிமாற்றம்' (Journalism & Mass Communication) முதுநிலை பட்டய படிப்பிற்கான ஆய்வில் (P.G Diploma Project),  நான் ஈடுபட்டேன்.

கடந்த சட்ட மன்ற தேர்தல் உள்ளிட்டு, தமிழ்நாட்டின் போக்கு தொடர்பான எனது பதிவுகளில் வெளிவந்த‌  கணிப்புகள் எல்லாம், அடுத்து அடுத்து சரியென்று நிரூபணமாக, மேற்குறிப்பிட்ட உழைப்பே முக்கிய காரணமாகும்; 1925 முதல் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்கள் உள்ளிட்டு, திராவிடர்/திராவிட இயக்கம் பற்றிய எனது புரிதலின் பின்னணியில்.

ஜெயலலிதா மறைவிற்கும், தி.மு.க தலைவரின் உடல்நலக் குறைவிற்கும் பின், தமிழ்நாட்டு திராவிட அரசியலில் எதிரெதிர் குவியங்களாக வெளிப்பட்டுள்ளவர்கள் ஸ்டாலினும் சசிகலாவும் ஆவார்கள்.

பொதுமக்கள் கருத்துருவாக்க சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி மேற்கொள்ளப்படும் நிலைப்பாடுகள் மூலம், தமக்கு தாமே குழி பறித்துக் கொள்ளும் போக்கில், இருவருமே கீழ்வரும் செயல்நுட்பத்தில் பலியாகி உள்ளார்கள், என்பது எனது கணிப்பு ஆகும்.

“ஜப்பானிய 'ஜுஜுட்சு' (Jujutsu;https://en.wikipedia.org/wiki/Jujutsu) சண்டையில், எதிரியின் வலிமையையே, எதிரிக்கு எதிராக பயன்படுத்தி வெற்றி பெறுவர். எதிரியே தனது வலிமையை 'தானம்' செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு', தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது; ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை அப்பொல்லோவில் தொடங்கிய நாள் முதல்; அந்த 'மர்மத்தை' எதிர்த்து குரல் கொடுக்காமல், 'சசிகலா குடும்ப சூழ்ச்சிக்கு' நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைத்து, தத்தம் அரசியல் அடித்தளங்களை, தாமே 'நாசமாக்கி' கொண்ட கட்சிகளின், தலைவர்களின் பங்களிப்போடு.” (http://tamilsdirection.blogspot.sg/2017/04/depoliticize12-social-energy.html(குறிப்பு கீழே: மோடி அரசின் 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு' )

முதலில் மேலே குறிப்பிட்ட சமூக செயல்நுட்பத்தில் சிக்கி, சசிகலா தமக்கு தாமே எவ்வாறு குழி பறித்துக் கொண்டார், என்பதை பார்ப்போம்.

“பொது மக்களிடம், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களிடம் நல்ல பேர் எடுக்க வேண்டுமானால், நமது பேச்சுக்கும், எழுத்துக்கும், வாழும் வாழ்வுக்கும் இடையே 'சுருதி பேதம்' இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு வாழ்ந்து ஈட்டிய நல்ல பேரை, அதன் பின்னர் வெளிப்படும் 'சுருதி பேதம்' மூலம் எளிதில் இழந்து விடலாம்; மீண்டும் நல்ல பேர் எடுக்க வழியே இன்றி. இது தமிழ்நாட்டில் அரசியல் நீக்க போக்கின் காரணமாக, 'ஏக போக வலிமை' பெற்றுள்ள, பொதுமக்களின் கருத்துருவாக்கம் (Public Opinion) தொடர்பான சமூக செயல்நுட்பம் (Social Mechanism) ஆகும்.

பொதுமக்களின் கருத்துருவாக்கம் (Public Opinion) தொடர்பான சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய புரிதலின்றி, அரசியல் அலையில் மேலே போகிறவர்கள் எல்லாம், 'சுதாரிக்காமல்', மக்களை 'ஆட்டு மந்தைகள்' என்று கருதி, துடிப்புடன் பயணித்தால், தாம் எதனால் கீழே விழுந்தோம்? என்பது கூட புரியாமல், மண்ணைக் கவ்வுவார்கள், என்பதற்கு விஜயகாந்த் வரலாற்று சாட்சியாகி விட்டார்: வைகோவைப் போலவே.” என்பதையும்;

“விஜயகாந்த் வழியில், அவர் சந்தித்திருப்பதை விட, இன்னும் மோசமான விளைவை சந்திக்கும் திசையில், சசிகலா பயணிக்க தொடங்கி விட்டாரா? “ என்பதையும்;

ஏற்கனவே பார்த்தோம். (December 18, 2016 ; http://tamilsdirection.blogspot.sg/2016/12/depoliticize.html )

தமிழ்நாட்டில் பொது அரங்கில் வெளிப்பட்டு வரும் போக்குகளை 'கண்காணித்து', அந்த போக்குகளை தமது 'அரசியல் லாபங்களுக்கு' பயன்படும் வகையில் தி.மு.க வின் நிகழ்ச்சிகளை 'நெறிப்படுத்தி' வெற்றி கண்டு வந்த, தி.மு.க தலைவர், அந்த போக்கில் எம்.ஜி.ஆரிடம் தோற்றுப் போனார். பின்னர் ஜெயலலிதாவிடம் இரண்டு முறை தி.மு.க தலைவர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில், 'சசிகலா குடும்ப ஊழல்' காரணமாக பொதுமக்களிடம் வெளிப்பட்ட வெறுப்பே காரணமானது. அதைக் கண்டுபிடித்து, வெற்றி பெற்று, முதல்வரான ஜெயலலிதா, அதே காரணத்தால், 'மர்மமான' முறையில் மரணமடைந்துள்ளார்.

பொதுமக்கள் பார்வையில் இன்று தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமானவை, கீழ்வரும் இரண்டே குவியங்கள்  ஆகும்.

1. இப்போதுள்ள அரசு நீடிக்குமா? கவிழுமா? இந்த நிச்சயமற்ற போக்கு எப்போது முடிவுக்கு வரும்?

2. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை, மற்றும் 'மர்மமான மரணம்' தொடர்பாக சி.பி.அய் விசாரணை வருமா?

தி.மு.கவைப் பொறுத்த மட்டில்;

1952 தேர்தலில் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் பக்கம் இழுத்து, ராஜாஜி முதல்வரான அதே வழிமுறையில்;

ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' தொடர்பான சி.பி.ஐ விசாரணை கோரிக்கையையும், ஊசலாட்டத்திற்கு இடமில்லாத, நிலையான ஆட்சியையும் முன்னிறுத்தி;

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க அணிக்களின் எம்.எல்.ஏக்களை இழுத்து. முதல்வராகும் வாய்ப்பினை ஸ்டாலின் தவற விட்டு, அரசியல் குழப்பமானது வலிமையாக வழி செய்து விட்டார், என்பது எனது கணிப்பாகும்.

தமிழ்நாட்டு மக்கள் மன்றத்தில் உள்ள, மேலே குறிப்பிட்ட குவியங்களைப் புறக்கணித்து;

'குடியரசு தலைவர் தேர்தல்' என்ற தேசிய குவியத்தில் சிக்கி:

முதல்வராகும் வாய்ப்பினை மேலும் பலகீனமாக்கும் வகையில், தி.மு.க தலைவரின் 'வைர விழா' நிகழ்ச்சியானது, தேசிய அளவில் செல்வாக்கிழந்து வரும் ராகுலுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், முடிந்துள்ளதா? என்ற கேள்வியை, கீழ்வரும் செய்தியானது எழுப்பியுள்ளது.

“தற்போது நான் அறிந்தவரை தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இளைய தலை முறையினரால் எதிர்காலத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள முடியவில்லை. இதுதான் காங் கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறுவடை செய்ய வேண்டும்.” - ராகுல் காந்தி ( ‘தமிழக அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது: வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்- காங்கிரஸாருக்கு ராகுல் அறிவுரை’; http://tamil.thehindu.com/tamilnadu )

மேலே குறிப்பிட்ட போக்கில், ஸ்டாலினோடு போட்டி, போடும் வகையில்:

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், ஓ.பி.எஸ் முதல்வராகி, குறுகிய காலத்தில், 'ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வெற்றி', சென்னை வெள்ள நிவாரணம், என்று செயல்பட்டு, 'மக்கள் குறைகளை தீர்க்காத, மாவட்ட அளவிலான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்து, மத்திய அரசுடனும் இணக்கமாகி, நிலையான ஆட்சி என்ற திசையில் பயணிக்க தொடங்கிய கட்டத்தில்;

அவரை அவமதித்து, முதல்வர் பதவியிலிருந்து அகற்றி, ஈ.பி.எஸ்ஸை முதல்வராக்கி, தினகரனை துணைப் பொது செயலாளராக்கி:

ஆர்.கே. நகர் சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்தில், சசிகலாவின் படத்தையே தவிர்த்து, தினகரன் பிரச்சாரம் செய்த அளவுக்கு, மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் உள்ளான சசிகலா:

ஈ.பி.எஸ் ஆட்சியின் நிலையற்ற போக்கினை மேலும் கூட்டி, அ.தி.மு.க கட்சியையும், விஜயகாந்த் கட்சி அளவுக்கு சீரழிக்காமல், ஓய மாட்டாரா? என்ற கேள்வியை, கீழ்வரும் செய்தியானது, எழுப்பியுள்ளது.

“அ.தி.மு.க.,வில் இருந்து, தன்னை ஒதுக்கிய, முதல்வர் பழனிசாமி அணியினருக்கு, துணை பொதுச் செயலராக தன்னை நியமிக்க வைத்த தினகரன், திடீர் கெடு விதித்துள்ளார்.
சசிகலா அறிவுரையை ஏற்று, 60 நாட்கள் ஒதுங்கியிருந்து, கட்சியை கண்காணிக்கப் போவதாகவும், 'அதற்குள் ஒன்றுபடாவிட்டால், எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வேன்' என்றும், அவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.” (http://www.dinamalar.com/news_detail.asp?id=1784472 )

சசிகலா குடும்ப அரசியல் ஆதிக்கமானது, கீழே குறிப்பிட்டுள்ளவாறு, சட்டத்திற்கு அப்பாற்பட்ட சசிகலாவின் வலிமையின் வரை எல்லைகள் (limitations) தெரியாமல் பயணித்து, மரணவாயிலை நெருங்கியுள்ளது.

உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி, வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரை எல்லைகளை, 'அந்த சமூக வலிமை' பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளாக;  (http://tamilsdirection.blogspot.sg/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html   )

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் கட்டுப்பாட்டில் இருந்த எம்.எல்.ஏக்களை, மாநில முதல்வர் விரும்பினாலும் சந்திக்க முடியாது, என்பதை 'கூவத்தூர்' மூலம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தி தமிழ்நாட்டில் சாத்தியமே என்பதை நிரூபித்தார் சசிகலா; தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளான‌தைப் பற்றிய கவலையின்றி.

தமிழக பா.ஜ.கவானது, மேலே குறிப்பிட்ட இரண்டு குவியங்களையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் வேர் பிடிக்க வாய்ப்பில்லை, என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

இந்தியாவில் சாதியை ஒழித்து, சமூக மாற்றத்தினை ஏற்படுத்தும் 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, இந்தியாவில் காலனி ஆட்சியின் எதிர்காலம் பற்றிய, காரல்மார்க்சின் கணிப்பு பொய்த்துப்போனது, மற்ற கணிப்புகளை போலவே. (“Modern industry, resulting from the railway system, will dissolve the hereditary divisions of labour, upon which rest the Indian castes, those decisive impediments to Indian progress and Indian power.” (On Colonialism, Moscow edition 1974, p. 85) & “whatever may have been the crimes of England she was the unconscious tool of history in bringing about that revolution.” ; Karl Marx in the New-York Herald Tribune 1853- The British Rule in India ; https://www.marxists.org/archive/marx/works/1853/06/25.htmஅந்த கணிப்புக்கு மாறாக, காலனி ஆட்சியை விட மிக மோசமான ஆட்சியானது, தமிழ்நாட்டில் பிற்காலத்தில் அரங்கேறுவதற்கான விதையா, காலனிய சூழ்ச்சியில் 'பெரியார்' ஈ.வெ.ராவை சிக்க வைத்து,  1944இல் திராவிடர் கழகம் உருவானது. அதன் தொடர்ச்சியாக, 1967இல் முளை விட்ட ஊழல் போக்கானது, 1991இல் இன்னும் மோசமாகி, 'ஆம்னஸ்டிக் இன்டர்நேஷ்னல்' (amnesty international) பாராட்டும் 'மனித உரிமை' காவலர்களையும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் பலரையும், 'மெளன கூட்டாளிகளாக்கி', தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி அபகரித்தல், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வள‌ங்களை ஊழல் பேராசையில் சூறையாடும் போக்கில், காலனி ஆட்சியை விட மோசமான போக்கில், அடுத்த அடுத்த ஆட்சிகளிலும், தமிழ்நாடு பயணிக்க காரணமான, சசிகலாவும் கீழ்வரும் வகையில், 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக (unconscious tool of history) செயல்பட்டு வருகிறார்.

முதல்வர் ஒ.பி.எஸ்க்கு கிடைத்த அரிய வாய்ப்பினை சீர்குலைத்த சசிகலா,  'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, திராவிட ஆட்சிகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, 1967க்கு முன் இருந்தது போன்ற, தேசிய நீரோட்டத்தில், பயணிக்க செய்வார்; 'பெரியார்' ஈ.வெ.ரா வளர்த்த 'குருட்டு பகுத்தறிவிலிருந்தும்' தமிழ்நாடானது, 'விடுதலை' பெறும் வகையில், என்பதும், சசிகலாவிற்கு துணை புரியும் போக்கிலேயே, ஸ்டாலின் 'தொடர்ந்து' பயணித்து வருகிறார் என்பதும், எனது கணிப்பாகும்.

அந்த மாற்றமானது,  ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.

அது தொடர்பான, கீழ்வரும் எச்சரிக்கையையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

“அரசியலில் 'வெற்றி வாய்ப்பை மோப்பம் பிடித்து', 'ஒட்டிக்கொள்ளும்' 'சமூக கிருமிகள்' மிகுந்துள்ள சூழலில், 'அந்த சமூக கிருமிகளை', மக்கள் மன்றத்தில், துணிச்சலுடன் அம்பலப்படுத்தும் போக்கு வெற்றி பெறாமல்;

ரஜினி, பா.ஜ.க உள்ளிட்டு எவரும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தாலும், 'அந்த சமூக கிருமிகளின் பிடியிலிருந்து' விலகி, தமிழ்நாட்டை மீட்பது அரிதாகும்.” (http://tamilsdirection.blogspot.sg/2017/05/blog-post_31.htmlசில விதி விலக்குகளுடன், 'நேர்மையான' சுயசம்பாத்திய முறையில் செல்வமோ, சமூகத்தில் செல்வாக்கோ, பெற இயலாதவர்களுக்கும், 'தேர்தல் அரசியல் சூதாட்டத்தில்' பங்கு பெற்று 'பலன்' பெறும் திறமைகள் இல்லாதவர்களுக்கும்;

'குறுக்கு வழியாக',  'பெரியார் வழியில்' பயணிக்கும் சமூக கிருமிகளும், அதில் அடக்கம். 'பெரியார்' கொள்கையாளர்களில் பலர், 'அறிவுபூர்வ மயக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக' பயணித்து வருவதே, 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாக காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

“ 'பெரியார்' கொள்கையாளர்கள் உணர்ச்சிபூர்வ போதையில் ஒரு வகையிலான 'அறிவுபூர்வ மயக்கத்தில்' பயணித்து வருவதை, பெங்களூர் குணாவின் நூல்கள் மூலம் நான், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்தபோதே, கண்டுபிடித்தேன்.

'தனித் தமிழ்நாடு' போதையில், பெங்களூர் குணாவின் நூல்களில் 'ஈ.வெ.ரா எதிர்ப்பு' இருந்தது தெரியாமல், அவரின் நூல்களுக்கு நன்கொடை வழங்கி, ஆதரித்து, அவருடன் நெருக்கமாகி, பல 'பெரியார்' கொள்கையாளர்கள் பயணித்தார்கள்.

நான் 'திருச்சி பெரியார் மையம்' மூலம், குணாவின், 'ஈ.வெ.ரா எதிர்ப்பை', அறிவுபூர்வமாக எதிர்த்த போதும், மேற்குறிப்பிட்ட 'மயக்கத்தில்' பயணித்தவர்களில், யார்? யார்? தெளிவு பெற்றார்கள்? அதே மயக்கத்தில் தொடர்ந்தார்கள்? என்பது எனக்கு தெரியாது..” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post.html'அந்த மயக்கத்தில்', 'பெரியார்' கொள்கையாளர்களில் பலர் பயணித்து வந்ததை பற்றிய 'அறிவு' கொடுத்த துணிச்சலும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்ததற்கும், ஒரு காரணமா? என்ற ஐயமும் எனக்கு இருக்கிறது.

'பெரியார்' ஈ.வெ.ரா வளர்த்த 'குருட்டு பகுத்தறிவிலிருந்தும்'  தமிழ்நாடானது, 'விடுதலை' பெறும் வகையில், திராவிட ஆட்சிகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, 1967க்கு முன் இருந்தது போன்ற, தேசிய நீரோட்டத்தில், பயணிக்க செய்யும் 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, சசிகலா வெளிப்பட்டுள்ளதை நான் கண்டுபிடித்து;

அந்த போக்கிற்கு துணை புரியும், 'வரலாற்றின் சுயநினைவுள்ள‌ கருவி'யாக (conscious tool of history), நான் செயல்படும் ஆய்வில், எனது இசைத் தகவல் தொழில்நுட்ப (Music Information Technology) ஆய்வுகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி ஈடுபட;

'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்து, 'சசிகலா குடும்ப ஊழல் வலைப்பின்னலில்' இடம் பெற்ற, தமிழ்நாட்டில் ‘பொது வாழ்வு வியாபாரத்திற்கு’ துணை போகும் 'குருட்டு பகுத்தறிவு பார்வை' நோயில் சிக்கி, உணர்ச்சிபூர்வ போக்குகளை வளர்த்து வரும் நிகழ்கால சாட்சிகளான‌, 'பெரியார் சமூக கிருமிகளும்', அக்கிருமிகளின் எடுபிடிகளும் காரணமாகி;

அவர்களும் சசிகலா வழியில், 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'களாகி விட்டார்கள். (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html1967இல் ஊழல் அறிமுகமாகியிருந்தாலும், தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் 'வீரியத்துடன்' சீரழித்த, 'ஊழல் சுனாமி' 1991இல் உருவாகாமல் இருந்திருந்தால், இது போன்ற நபர்கள் உருவாகியிருக்க மாட்டார்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். அவ்வாறு 'ஊழல் சுனாமி' மூலம் இவர்கள் உருவாக, இவர்கள் மூலம் 'அந்த சுனாமியின்' விதையானது, காலனி சூழ்ச்சியில் 1944இல் உருவானது, என்பதை நான் கண்டுபிடித்து, 'மீட்சிக்கான அறிவுபூர்வ போரை' தொடங்க வேண்டும், என்பது இயற்கையின் விதி போல நடந்து, எனக்கு வியப்பை அளித்துள்ளது.


குறிப்பு: 'பசு வதைத் தடை சட்டம்' யாருக்கு  லாபம்? ; http://tamilsdirection.blogspot.sg/2015/03/12_6.html & https://swarajyamag.com/politics/cow-politics-if-bjp-wants-to-lose-2019-this-is-the-right-way-to-go-about-it

No comments:

Post a Comment