Sunday, January 22, 2017

                                       1938  -  1965  -   2017


எச்சரிக்கை:
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு டிவிட்டரில் கூறியுள்ளது:" அவசர சட்டம், தமிழக சட்டசபையில் சட்டமாக உருமாறும்போது, அது நிரந்தர சட்டமாகிவிடும். அநேகமாக விரைவிலேயே அதை அரசு செய்யப்போகிறது. எனவே பிரச்சினையில்லை" என கூறியுள்ளார். (http://www.newindianexpress.com/cities/chennai/2017/jan/22/apprehensions-of-jallikattu-agitators-unfounded-katju-1562344.html ) இது சரி என்றால், போராட்டம் தொடர்வது, தவறாகாதா? 10 ஆண்டுகளாக சொந்த செலவில் சட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தும் ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ ராஜசேகர், தமிழக முதல்வருக்கு சட்ட ஆலோசனை வழங்கவும், 4 துறை அமைச்சர்களை சந்திக்கும் குழுவிலும் இடம்பெற்றுள்ள நிலையிலும், ஆளாளுக்கு 'எது நிரந்தர சட்டம்?' என்று குழப்பி வருவது சரியா? ஹிப் ஹாப் ஆதி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டு போராட்டத்தை தூண்டியவர்கள் தெளிவுபடுத்தி, போராட்டத்தை நெறிப்படுத்துவது, அவர்களின் சமூக கடமையாகாதா? 

தவறினால், அக்குழப்பம் சட்டம் ஒழுங்கு சிக்கலாகி, தடியடி, துப்பாக்கி சூடு என்று பல உயிர்களை 'காவு' வாங்கினால், பலியாக போவது குப்பன், சுப்பன் வீட்டுப் பிள்ளைகளே, 1965 போல, தற்போது 1938 வழியில் நடைபெற்று வரும் போராட்டமானது திசை மாறினால்.
ஆதியின் சரியான எச்சரிக்கை: https://www.facebook.com/hiphoptamizha/?hc_ref=SEARCH
'The Godfather'  ( https://en.wikipedia.org/wiki/The_Godfather_(novel)மற்றும் 'The Aquitaine Progression' (https://en.wikipedia.org/wiki/The_Aquitaine_Progression ) ஆங்கில நாவல்களை படித்தவர்களால், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டத்தில், முதல்வரையும், பிரதமரையும்,இழிவுபடுத்திய, போராட்டத்தில் 'ஊடுருவிய'  'சுயநல சக்திகள்' பற்றியும், 'பீட்டா' அமைப்பின் சர்வதேச சூழ்ச்சி பற்றியும் (http://www.nathanwinograd.com/?cat=10 ), அந்த 'சூழ்ச்சிக‌ள்' தெரியாமல், அந்த 'உணர்ச்சிபூர்வ' போக்கில், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டத்தில்,  'நிதானம்' தவறி, 'உளறியவர்கள்' பற்றியும், விளங்கிக் கொள்ள முடியும். 10 வருடங்களுக்கு மேலாக போராடி வரும் போராட்டக் குழுவின் விளக்கத்தை ஏற்காமல் (https://www.youtube.com/watch?v=TpNSc32jLew ) ; வன்முறைகளுக்கு இடம் கொடுத்து, மறுநாள் 'நீதியரசர் ஹரி பரந்தாமன் ஜல்லிக்கட்டு சட்டம் பற்றி விளக்கிக் கூறியதை அடுத்து மாணவர்கள் மெரினா போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.'(http://tamil.thehindu.com/tamilnadu/) என்பதும் கவனிக்கத்தக்கதாகும்; 1965 திசை திருப்பல் முயற்சியானது, முளையிலேயே, நல்ல வேளையாக ஒரு நாளிலேயே முடிவுக்கு வந்ததும். 

                                            -----------------

'ஜல்லிக் கட்டு' போராட்டத்தில், 'திராவிட' கட்சிகளும், அந்த கட்சிகளின் 'வால்களாக' பயணித்த 'தேசிய' கட்சிகளும், தமிழ்நாட்டில் 'அந்நியமாகியுள்ளதானது', உலகிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும்.

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் கேடுகளில் முடிந்த, காந்தியின் 'அகிம்சை' வழியிலிருந்து மாறுபட்டு, உலக வரலாற்றிலேயே முதல் முறையாகவா? என்ற கேள்வி எழும் வகையிலும்;

ஊழல் அரசியலில், கட்சித் தலைவரின் காலில் விழும் அவமரியாதை முதல்வர்கள், அமைச்சர்களின் பங்களிப்பால், இந்திய அளவிலும், உலக அளவிலும், ஈடு இணையற்ற தலைக்குனிவுக்கு உள்ளாகி, 'அவமரியாதை நாடா, தமிழ்நாடு?' என்ற கேள்வி அரங்கேறி வந்துள்ள சூழலில்;

கட்சிகளையும், தலைவர்களையும் ஓரங்கட்டி;

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, அந்த அவமரியாதையிலிருந்து, தமிழ்நாட்டை மீட்கும் வகையில், 'மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த, 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டமானது, அரங்கேறிவருகிறது.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து, முற்றிலும் மாறுபட்டு, ஈ.வெ.ராவை அவமதித்து, பொதுச் சொத்துக்களுக்கும், பொது மக்களுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில், அண்ணாவும், ராஜாஜியும் தூண்டி, நடைபெற்ற 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடான திசையில், தமிழ்நாடு பயணித்து, சீரழிவின் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது.  

‘1944க்கு முன்  ‘பெரியார்’ தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன?சமூகத்தில் பெரியவர்கள் 'பொறுப்பிலாமல்' ஒதுங்கி, 'மாணவர்களை' முன்னிறுத்தி போராடும் இழிவான போக்கு,காந்தி காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகள் போல தமிழ்நாட்டில் வேர் பிடிக்காத நிலையில், தமிழ்நாட்டில் எப்போது, எப்படி வேர் பிடித்து வளர்ந்தது. என்ற கேள்விகளுக்கான  விடையைத் தரும்.’ (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

அனைத்து கட்சி தலைவர்களையும் ஓரங்கட்டி, மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்த 'ஜல்லிக்கட்டு மீட்சி' போராட்டமானது, 1965 போராட்டத்திற்கு எதிரான திசையில், 1938ஐ நோக்கி, 1938 போராட்ட திசையில், அதனையும் விஞ்சி, சாதனை படைத்துள்ளது.
(‘Not expecting support from any organisation nor political parties has been the hallmark of the demonstrations led predominantly by students and young working professionals, demanding revocation of ban on jallikattu.  In the same way, they have steadfastly remained independent in arranging food, water and cleaning the leftovers at Marina.’; http://www.newindianexpress.com/cities/chennai/2017/jan/20/jallikattu-agitators-in-chennai-continue-to-be-self-reliant-for-food-water-1561514.html )

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பயணித்த திசையிலிருந்து, 1944இல் 'ஆரியர் - திராவிடர்' மோதல் அறிமுகத்தோடு, திசை திரும்பி பயணித்தன் விளைவே, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதும்;

அந்த திசையில் தமிழ்நாடு பயணித்த போக்கில், காலனிய சூழ்ச்சியின் அடுத்த கட்ட தொடர்ச்சியாக, வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்களின் ஒத்துழைப்போடு, அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட 'பீட்டா' அமைப்பும் (http://www.nathanwinograd.com/?cat=10  )  வளர்ந்து, சூழ்ச்சி வலையில் ஜல்லிக்கட்டை ஒழித்ததானது;

தமிழ்நாட்டின் அழிவு திசை பயணத்திற்கு எதிரான சமூக ஆற்றல்கள் எல்லாம், சென்னை வெள்ள நிவாரணத்தை குவியப் புள்ளியாக்கி, வெளியாகி, அந்த புதிய சமூக செயல்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக‌, 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பையும் 'குவியப் புள்ளியாக்கி, வெற்றி நோக்கி பயணிக்கும் சமூக செயல்நுட்பத்தை நான் கண்டுபிடித்து, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

‘மக்களின் தேவைகளும், அதை உணர்ந்து (sensitize),  செயல்பூர்வமாக உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance), செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை(structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே உருவாகும்.’(http://tamilsdirection.blogspot.in/2016/10/blog-post.html )

ஊழல் அரசியலில் தமிழ்நாடு பயணித்ததால் விளைந்த காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சினைகளில், உச்சநீதிமன்ற ஆணைகளும் செல்லாக்காசாகி வரும் சூழலில்;

அதே ஊழல் அரசியல் காரணமாகவும், மேற்கத்திய ஆதிக்கத்தில்  'ஆரிய - திராவிட' பிரிவினை சூழ்ச்சியில், தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவைக்கு ஏற்பட்ட வீழ்ச்சியும், தமிழரின் அடையாளத்திற்கு ஆபத்தாக கருத்தப்பட்ட சூழலில்;

'மாணவர்களின், இளைஞர்களின், 'சமூக உளவியலில்' அதிகரித்து வந்துள்ள 'அவமரியாதைக்கு' எதிரான 'சுயமரியாதை' 'தீயானது',

கிராமம், விவசாயம், பண்பாடு, சுயமரியாதை, வீரம் உள்ளிட்ட பல பரிமாணங்களை உள்ளடக்கிய‌ 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பானது', அந்த‌ 'சுயமரியாதை தீ' வெளிப்படுவதற்கு வாய்ப்பானது;

எனவே மாணவர்களை, இளைஞர்களை நேரடியாக பாதிக்கும் கல்விக் கொள்ளை திசைக்கும் எதிராக பயணிக்கும் அறிகுறிகளுடன், அது அரங்கேறியுள்ளது.

மேலே குறிப்பிட்ட சமூக செயல் நுட்பத்தை, ஓரளவு அடையாளம் கண்டு, ''இந்திய இளைஞர்களுக்கு வழி காட்டும் தமிழ் எழுச்சி' (‘Tamil spring awaits India's youth’) என்ற தலைப்பிலான, கீழ்வரும் கட்டுரை விளக்கியுள்ளது. 

‘How much of our history and past, our culture and spirituality, our identity and authenticity as a people, shall we pawn for the glitter and titillations of modernity? Should we sever our roots to be transplanted into the global village? Can material gains compensate for all that we are robbed of in the process? Is modern culture all sanity and our native cultures a domain only of embarrassment? Shouldn’t we critique the seed of cultural inferiority our colonial masters planted in our collective consciousness and muster up the courage to look at the warts on the faces of the western cultural monolith? How come, as Krishnamachari Srikkanth asked, boxing is not cruelty and Jallikattu is?


வெள்ளையர்கள் தம்மைவிட நாகரிகத்தில் கீழானவர்களாக இந்தியர்களை நடத்தி, இந்தியர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex), வெற்றிகரமாக விதைத்த காலனிய சூழ்ச்சியில், ஈ.வெ.ரா அவர்கள் சிக்கி; ('காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்' ; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

தமிழில்   ஏற்கனவே வழக்கில் இருந்த 'இனம்', 'சாதி' ஆகிய சொற்களின் பொருளை திரித்து,  'ஆரிய - திராவிட' பார்வையில், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை கெடுதலாக சித்தரித்து பயணித்த போக்கில்,  (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

தமது கடந்த கால வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், ஆன்மீகம், தனித்துவமான அடையாளம் தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், 'உலகமயமாதலின்' மூலமாக செயல்படும் மேற்கத்திய சூழ்ச்சிக்கு எதிராக, ஆக்கபூர்வ சுயமரியாதை மீட்சி திசையில், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' என்பதை குவியப் புள்ளியாகக் கொண்டு, படித்த இளைஞர்கள், படிக்கும் மாணவர்கள் முன்னணி வகிக்க, கிளர்ந்தெழுந்துள்ளது; ஜல்லிக்கட்டு காளையைப் போலவே;

'ஆரிய - திராவிட' காலனிய சூழ்ச்சியையும் அவமரியாதை போக்கின் கவசமாக ஒதுங்கச் செய்து. (http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.html  ) 

அறிவுபூர்வ விவாதங்களை தவிர்த்து, உணர்ச்சிபூர்வமாக 'பெரியார் கொள்கையில்' இனியும் பயணிப்பதானது, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் தமிழர் சுயமரியாதை மீட்சி நோக்கில், 'ஜல்லிக்கட்டு' எதிர்ப்பில் வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும், உள்ளாகும் எதிர்க்குவியமாகும் ஆபத்தில், 'பெரியாரை' சிக்க வைத்து விடும்; தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு பற்றிய அவரின் தவறான நிலைப்பாடுகள் காரணமாக.

' ‘பெரியாரின்’  முழு பொதுவாழ்வையும், அவரின் தியாகங்களையும் கணக்கில் கொள்ளாமல், அவரைப் பற்றி 'இழிவாக', 'திராவிட உணர்ச்சிபூர்வ பாணியில்' பேசி/எழுதி வரும் 'இந்துத்வா' ஆதரவு பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், 'பெரியார்' கட்சிகள் 'நன்றி' சொல்லவேண்டும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட தவறான திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளுக்கு, 'ஆக்ஸிஜன்' வழங்கி, 'உயிருடன்' நீடிக்க உதவி வருபவர்களும் அவர்களே ஆவர்.' (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

குறிப்பு:

1. ‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவை மட்டுமே குற்றம் சொல்லும் சொந்தங்களுக்கு...,’ 

2. 'நண்பர்களே
தற்போது மெரினாவில் மைக் பிடித்த நண்பர்கள் முதல்வரை வாடா போடா என்று ஒருமையில் பேசி வருகின்றனர் 

கூட்டம் கூடிவிட்டதால் நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாமா நண்பர்களே
இந்த போராட்டமே அம்மாவோ ஐயாவோ இருந்திருந்தால் நடைபெற்றிருக்குமா 
காவல்துறை உதவியில்லாமல் நடைபெற்றிருக்குமா

சிந்தியுங்கள்'
https://www.facebook.com/gauthaman.br

No comments:

Post a Comment